Sunday, July 4, 2010

ஐ.நாவுக்கான பிரதித் தூதுவர் அவசர அவசரமாக நாட்டுக்கு திருப்பி அழைப்பு.

ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக நியூயோர்க்கில் கடமையாற்றிவந்த பந்துள ஜெயசேகர அவசர அவசரமாக நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இவர் சில மாத காலங்களுக்கு முன்னர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த நிலையில் வெளிவிவகார அமைச்சு இத்திடீர் முடிவை எடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு அவரை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அழைத்துள்ளமையை ஏற்றுக்கொண்டுள்ளது. மிகவும் பாரதூரமான விடயம் ஒன்றை அடுத்தே பந்துலக திருப்பி அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அமைச்சரக அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இவ்வாறு அவர் அழைக்கப்பட்டமைக்கான பின்னணி தொடர்பாக கொழும்பு வட்டாரங்கள் தகவலறிய முற்பட்டுவருகின்றன.

இவ்வாறே ஐ.நா விற்கான இலங்கைத்தூதராக ஜெனிவாவில் கடமையாற்றிய தயான் ஜெயதிலக அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். அவர் 13 திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்ற விடத்தினை தொடர்சியாக வலியுறுத்தியமையே அவர் பதவியிழக்க காரணமாயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com