Saturday, July 3, 2010

சந்திரிக்கா மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.

இலங்கை அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் மாற்றங்களின் பின்னர் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க போட்டியிடலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரு தடவைகளளே பதவி வகிக்கமுடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வரையறைனை 3 தடவைகளாக மாற்ற அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டால் சந்திரிக்கா தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை அவர் மேற்கொண்டுவருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்காக தனித்து போராடுவதற்கான காலம் இதுவல்ல எனவும் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரிவித்துள்ளது.

மக்கள் பிரிவின் தலைவர்களான உபுலங்கனி மானவாடு அனுருத்திக திஸாநாயக்க ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனித் தனியாக சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் அரசியல் ரீதியான அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உப்புலாங்கனி மானவடுமக்கள் பிரிவை கலைத்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து அடுத்த சில தினங்களில் நடைபெறவுள்ள மத்திய செயற்குழுவில் தீர்மானிப்பதாகக் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com