Sunday, July 18, 2010

கனடாவை நோக்கி புறப்பட்ட அகதிகள் கப்பல் கௌத்தமாலாவில் கண்டுபிடிப்பு

ஈழத் தமிழ் அகதிகள் சுமார் 200 பேருடன் கனடாவை நோக்கி புறப்பட்டிருக்கின்றது என்று சந்தேகிக்கப்படுகின்ற தாய்லாந்து நாட்டு சரக்குக் கப்பல் கௌத்தமாலா நாட்டுக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எம்.பி.சன்.சீ என்கிற இக்கப்பல் நேற்று இந்நாட்டுக்கு அருகில். வந்துள்ளது.

இதில் 219 ஈழத் தமிழர்களும்,12 இந்தியத் தமிழர்களும் வந்திருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இக்கப்பல் முதலில் ஆஸ்திரேலியா செல்ல இருந்தது என்றும் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டு பிரித்தானிய கொலம்பிய கடலூடாக கனடாவை நோக்கி புறப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

1 comments :

Anonymous ,  July 18, 2010 at 8:00 PM  

கனடா, உலகிலுள்ள கிரிமினல்களுக்கு தஞ்சம் கொடுக்கும் நாடு. எனவே தான் உலக கிரிமினல்கள் அங்கு படையெடுக்கிறார்கள்.

ஈழத் தமிழ் அகதிகள் என்ற போர்வையில் எந்த ஒரு கொலைகார புலிகளும் தப்பிக்க கூடாது.

ஆசி, ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி கனடாவும் மிகத் தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com