Saturday, July 3, 2010

விமல் வீரவன்சவின் கூற்றுக்காக அரசாங்கம் மன்னிப்பு கோருமாம்.

வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் பத்திரிகையாளர் மாநாடொன்றில் பேசுகையில் , இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவை ஐ.நா கலைக்கும் வரை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு அதன் ஊழியர்கள் அலுவலகத்தினுள்ளேயே முடக்கப்படுவர் என தெரிவித்திருந்தார்.

இக்கருத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளதுடன் , அரசாங்கம் அக்கருத்து விமல் வீரவன்சவின் தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஐ.நா வின் பேச்சாளர் அவர்கள் அமெரிக்க நிவ்யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் இலங்கை அரசாங்கம் இக்கருத்துத் தொடர்பாக ஐ.நா சபையிடம் மன்னிப்புகோரவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நாம் அதன் விளக்கத்தை எதிர்பார்த்திருக்கின்றோம் என தெரிவித்த அவர் அரசாங்கம் விமல்வீரவின்சவின் கூற்று அவரது தனிக்கூற்று என தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments:

Post a Comment