Tuesday, July 6, 2010

'பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை' – மேர்வின் சில்வா

நாட்டின் ஜனாதிபதியை கொல்ல சதி முயற்சிகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு இராணுவ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகாவை உயிருடன் புதைப்பதற்கு மயானம் தேவை என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உரையை பாடலுடன் ஆரம்பித்த அமைச்சர் மேர்வின் சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்சேகா மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் உரைகளுக்கு பதிலளித்து கடுமையாக உரையாற்றினார்.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் இலட்சினை கழற்றப்பட்டவர் பொன்சேகா. பின்னர் அவரின் சாஸ்திரம் நன்றாக இருந்தமையினால் மீண்டும் பதவி கிடைத்தது. அவருக்கு தேவையானதை அதிபர் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொடுத்துள்ளார்.

மதிப்புமிக்க ஜனாதிபதியை அவர் தூற்றுகின்றார். அவரை உயிருடன் புதைப்பதற்கான மயானத்தை அமைக்க வேண்டும். அமெரிக்காவில் இவ்வாறானதொரு மயானம் இருக்கின்றது.

அதேபோல மங்கள சமரவீர கூறுவதை போல பான் கீ மூனுக்கு அஞ்சி முழங்காலிட்டு செயற்பட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் பிரச்சாரங்களின்போது ஜெனரல்; பொன்சேகா பாராளுமன்று வந்தால் தான் தனது பதவியை துறப்பேன் என அவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment