Saturday, July 24, 2010

பண்டாரநாயக்க குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மகிந்த அரசு மேற்கொள்கிறது.

பண்டாரநாயக்க குடும்பத்துக்கு எதிரான கொள்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அவரின் தாயாரான ஸ்ரீமாவோ பண்டார நாயக்க குமாரதுங்க உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கைப் பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்டு ஐம்பது வருடங்கள் கடந்த 21 ஆம் திகதி நிறைவடைந்தன.

ஆனால் அரசு இந்த 50 ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடத் தவறி விட்டது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குக் கருத்துக் கூறியபோதே அவர் இப்படிக் கூறியிருக்கின்றார்.

இந்த விழாவை அரசு இனி வரும் அண்மைய நாட்களில் கூட விரும்பினால் கொண்டாட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

No comments:

Post a Comment