Monday, July 5, 2010

மூன்று இனந்தெரியாத சடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறநகர்ப் பகுதிகளான வத்தளை , களுத்துறை , கல்கிசை ஆகிய பிரதேசங்களில் மூன்று இனந்தெரியாக சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸ் தகவல்களின் பிரகாரம் களுத்துறை சனச வங்கிக்கு முன்னால் உள்ள மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த உடலம் ஒன்று நேற்று 4ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலம் சுமார் 5 அடி உயரமுள்ள ஆண் ஒருவருடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவ்விடத்தில் செருப்பு கூட்டம் ஒன்றும் நீல நிற வரி சறம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அடுத்து வத்தளை பிரீத்திபுர சிறுவர் இல்லத்திற்கு பின்னால் உள்ள கரையோரப் பிரதேசத்தில் சுமார் 5 அடி 2 அங்குலம் உயரமுள்ள 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் இறக்கும்போது மஞ்சள் - நீல ரீசேர்ட் அணிந்திருந்துள்ளார். இச்சடலம் அடையாளம் காண்பதற்காக றாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்கிசை கடற்கரைப் பிரதேசத்தில் இளைஞன் ஒருவனின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இளைஞன் காலி பிரதேசத்திலிருந்து வேலைதேடி கொழும்புக்கு வந்திருக்ககூடும் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி உடலங்கள் தொடர்பாக பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment