கொழும்பில் பம்பலப்பிட்டி கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற 28 வயது இளம் யுவதி ஒருவரை அப்பகுதியில் கடமையில் நின்ற இராணுவ சிப்பாய் ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இன்று மாலை காப்பாற்றி இருக்கின்றனர்.
தற்கொலைக்கு முயற்சித்தவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகின்றது. கடலோரத்தில் அமைந்திருந்த சோதனைச் சாவடி ஒன்றில் கடமையில் இருந்த இருவரும் தற்கொலை முயற்சியை நேரில் கண்டு சமயோசிதமாகச் செயற்பட்டு யுவதியைக் காப்பாற்றினர்.
No comments:
Post a Comment