Monday, July 26, 2010

கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது. புலிகளியக்க உறுப்பினர் என சந்தேகம்.

கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரினால் கைத்துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment