Saturday, July 3, 2010

ரஷ்ய “உளவாளி” பிணையில் விடுவிப்பு

ரஷ்ய உளவாளி என சந்தேகிக்கப்படும் விக்கி பிலா£ஸ பிணையில் விடுவிக்க அமெரிக்க நீதிபதி வியாழக்கிழமை அனுமதியளித்தார். ஆனால், விக்கி பிலாஸ் வீட்டுக் காவலில் இருக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரைத் தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பெருவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற செய்தியாளரான பிலாஸ், கண்காணிப்புக் கருவியுடன் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என்றார் நீதிபதி ரானல்டு எல்லிஸ். ஆனால், அவ்வாறு விடுவிக்க அவருக்காக யாராவது US$250,000 (S$350,000) பிணைத்தொகை கட்டவேண்டும். இதில் பத்தாயிரம் டாலர் ரொக்கமாக இருக்கவேண்டும்.

உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் ரிச்சர்ச் மர்ஃபி, சிந்தியா மர்ஃபி இருவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இத்தம்பதியருக்கு எதிராக அரசாங்கத்திடம் வலுவான ஆதாரம் இருப்பதாக நீதிபதி கூறினார்.

பிடிபட்டவர்களில் இன்னொருவரான யுவான் லசாரோவை என்ன செய்வதென்று பிற்பாடு தீர்மானிக்கப்படும் என்றார் நீதிபதி. ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததை இவர் ஒப்புக் கொண்டதாக அரசாங்க வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். - ஏஎப்பி

ஈரானுக்கு எதிராக புதிய தடை: ஒபாமா கையெழுத்துSat, 03/07/2010

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் கடுமையான புதிய தடை உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை கையெழுத்திட்டார். அணுவாயுதத் திட்டத்திற்கு ஈரான் நிதி ஒதுக்கக்கூடிய ஆற்றலை இந்தத் தடைகள் ஒடுக்கும் என்று அதிபர் ஒபாமா கூறினார். கூடுதல் நெருக்குதலையும் தனிமையையும் ஈரான் எதிர்நோக்குவதாகவும் அதிபர் ஒபாமா எச்சரித்தார்.

ஐநா பாதுகாப்பு மன்றமும் ஐரோப்பாவும் விதித்திருக்கும் புதிய தடைகளோடு, அமெரிக்காவும் தடைகள் விதிக்கிறது. ஈரானின் பெட்ரோலியப் பொருள் இறக்குமதியைத் தடுத்து, அனைத்துலக வங்கி நடவடிக்கைகளை ஒடுக்குவது தடைகளின் நோக்கம். “ஈரானிய அரசாங்கம் அணுவாயுதத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி மேம் படுத்தக்கூடிய ஆற்றலை ஒடுக்குகிறோம்” என்று வெள்ளை மாளிகையில் திரு ஒபாமா கூறினார்.- ஏஎப்பி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com