Saturday, July 3, 2010

சுவிற்சர்லாந்து தியாகிகள் தினம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் கடந்த 20 ஆண்டுகளாக தவறாது நினைவுகூரப்பட்டு வரும் தியாகிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுவிற்சர்லாந்தின் தலை நகர் பேர்ன் மாநிலத்தில் கும்லிங்கன் எனுமிடத்திலுள்ள உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த போராளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் நினைவுகூருமுகமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவர்களை புலிப்பாசிசம் கோடம்பாக்கத்தில் நிராயுதபாணியாக நின்றபோது காவு கொண்ட நாளான ஜூன் 19ம் திகதி தியாகிகள் தினமாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இத்தினம் இவ்வாண்டு இலங்கையின் வட-கிழக்கு , ஆசியாசிவில் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் , ஐரோப்பாவில் பிரான்ஸ் , ஜேர்மன் , லண்டன் , சுவிற்சர்லாந்து , மற்றும் கனாடா என உலகம் பூராகவும் கொண்டாடப்பட்டுள்ளது.

பேர்ண் மாநகரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வுகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் , மற்றும் பொதுமக்களுடன் அவர்களது நேச அமைப்புக்களான புளொட் , ஈபிடிபியினரும் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.

போராட்டத்தின் பெயரால் உயிரிழந்த போராட்ட அமைப்புக்களின் தலைவர்கள் , போராளிகள் , அரசியல்வாதிகள் , பொதுமக்களின் திருவுருப்படங்களினால் சோடனை செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலிச் சுடரேற்றி நிகழ்வுகள் ஆரம்பமாயின. அவ்வமைபின் உறுப்பினர்கள் , சக அமைப்புக்களை சேர்ந்தோர் தமது நினைவுரைகளை நிகழ்த்தினர்.

ஈபிஆர்எல்எப் இன் சர்வதேச கிளைகளுக்கான பொறுப்பாளர் திரு. தம்பா அவர்கள் பேசுகையில், நாபா அவர்கள் போராட்டத்தில் எவ்வாறு தன்னை இணைத்துக்கொண்டார் என்பதையும் அவர் பணிகள் தொடர்பாகவும் விளக்கியதுடன் மறைந்த தமது தலைவருக்கு தாம் அஞ்சலி செலுத்துவதற்காக பல இன்னல்களை சந்தித்துவந்துள்ளதை நினைவு கூர்ந்ததுடன் குறிப்பிட்ட நிகழ்வினை சிறப்பாக நிகழ்த்திய சுவிஸ் கிளையினருக்கு நன்றியை தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் நாம் 20வருட தியாகிகள் தினத்தை நினைவு கூரூவதில் பெருமையடைகின்றோம். ஏனெனில் இத்தியாகிகள் உயரிய இலட்சியங்களுடன் தொலைதூரக் கனவுகளுடன் போராடப்புறப்பட்டவர்கள். அவர்கள் எம் ஒவ்வொருவருடனும் இனைந்து பணியாற்றிய காலங்களைத்தான் நாம் இலகுவில் மறந்துவிட முடியுமா? தமிழ் சமுகத்தில் பல ஆற்றல்மிக்க தலைவர்கள் கல்விமான்கள் சமுகசெயற்பாட்டாளர்கள் புத்தியீவிகள் என பல்வேறு தரப்பிபினர் படுகொலை செய்ப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் இத்தியாகிகள் தினத்தில் நினைவுகூறுவோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக இடைவெளியினூடாக இவ்வருடம் வடகிழக்கில் தியாகிகள் தினம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்ட்டது. அதேபோல் வெளிநாடுகளிலும் பிரித்தானியா கனடா ஜேர்மனி பிரான்ஸ் போன்ற இடங்களில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இது தோழர்களாகிய எமக்கு உற்சாகத்தை தருகின்றது. இதனூடாக எமது கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை சார்பாக அக்கிளையின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு. ரட்ணகுமார் அவர்கள் கலந்து கொண்டு பேசியிருந்தார். அவர் பேசுகையில் , ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்களும் சுரண்டல்களும் உலகின் பாமர மக்களின் தலைவிதியையே தகர்த்துவிடும் என்பதை தோழர்கள் மத்தியில் ஆணித்தரமாக பதித்துவைத்தவர் தோழர் நாபா எனவும் அவரின் அன்றைய கூற்று நிதர்சனமாகி வருவதை எம் கண்முன்னே காணக்கூடியதாகவுள்ளதாகவும் தெரிவித்துடன் , புளொட் சுவிஸ் கிளையினரால் விடுக்கப்பட்ட நினைவுத் துண்டுப்பிரசுரமொன்றும் பங்கு கொண்டிருந்தவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் மட்டு-அம்பாறை மக்கள் அமைப்பான உதயத்தின் பொதுச் செயலாளர் திரு. அழகுகுணசீலன் அவர்கள் பேசுகையில் , எம்மினத்தின் நியாயமான உரிமைப் போராட்டம் இன்று நிர்க்கதியானமைக்கான காரணங்கள் பலவற்றை சுட்டிக்காட்டினார். குறிப்பாக பிராந்தியத்தில் இந்தியாவின் வல்லமை என்னவென்பது குறைத்து மதிப்பிடப்பட்டதன் விளைவினை நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்ற அவர் இன்று உலக அரங்கில் குறிப்பாக எம் பிராந்தியம் தொடர்பான விடங்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா , மன்மோகன் சிங் ன் ஆலோசனை , அனுமதியை பெறமால் எந்த நகர்வும் மேற்கொள்வதில்லை எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன் இலங்கையின் அரசியல் யாப்பில் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தாம் விரும்பும் கட்சியொன்றை ஆதரிக்கும் , அதில் செயற்பாட்டாளராகவிருக்கும் உரிமைகள் எம் எதிரிகளிடமிருந்து கிடைக்கப்பட்டிருந்தபோதும் எமது உரிமைகளுக்காக போராடுவதாக கூறிக்கொண்ட புலிகளமைப்பினால் மறுக்கப்பட்டையை விமர்சித்த அவர் மத்தியில் எம்மால் அரசியல் கட்சிகளை பதிவு செய்யமுடிந்தது அனால் அவை வடகிழக்கில் செயல்பட முடியாது போனது என்றார்.

ஈபிடிபி சுவிஸ்கிளை பொறுப்பாளர் தோழர் திலக் அவர்களின் அஞ்சலி உரையில் இன்றும் தோழர் நாபாவின் சிறப்பான அரசியல் வழிகாட்டிலில் தாங்கள் பயணிப்பதாகவும் தோழர் நாபா என்றும் ஓர் உத்தமர் என்றும் கண்ணீர்மெல்க தெரிவித்ததை காணக்கூடியதாகவிருந்தது.

இடதுசாரி செயற்பாட்டாளரும் அறுவை சஞ்சிகையின் ஆசிரியருமான தோழர் லோகநாதன் ஆசிரியர் பேசும்போது நான் தோழர் நாபாவுடன் அதிகளவில் நெருங்கிப்பழகியதில்லைலை. ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட தோழர்களுடன் பழகியிருக்கின்றேன். அதனூடாக தோழர் நாபா எப்படியான உயர்ந்த பண்புகளைக் கொண்டிருந்தார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. அத்துடன் நான் செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைப் பொறுப்புக்களிலிருந்து செயற்பட்ட தோழர் வீ.ஏ.கந்தசாமியும் தனது இறுதிக்காலத்தில் தோழர் நாபாவின் கட்சியுடன் இனைந்து செயற்பட்டார் என்னும்போது எனக்கு தோழர் நாபா மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கின்றது. இடதுசாரி முற்போக்கு சக்திகள் அனைவரும் ஐக்கியப்பட்டு பொதுவேலைத்திட்டத்தை உருவாக்கி செயற்படுவதே இந்த தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.


இவ்வாறு பலதரப்பட்டோரின் சிறப்புரைகளுடன் நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது.

இறுதிநிகழ்வாக பாசிச புலிகளால் கொலை செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சீகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் தியாகிகள் ஆன 13 தோழர்களின் இறுதி நிகழ்வு வீடியோ பதிவின் மூலம் திரையில் காண்பிக்கப்பட்டது பின்பு கட்சியின் கொள்கைத் திட்டம் மற்றும் தொடர்ந்து செல்லும் பணிகள் ஆகியன தெளிவாக விபரிக்கப்பட்டது கட்சித் தோழர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன நாட்டிய நிகழ்வுகளும் புரட்சி பாடல்களும் கவிதை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன...தோழர் நாபா மறையவில்லை என்ற கட்சிகிதத்துடன் இவ் நிகழ்வு இனிதே நிறைவேறியது இவ்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் கச கட்சித்தோழர்களும் ஈழக்கள் புரட்சீகர விடுதலை முன்னணியினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இவ்வாறான நிகழ்வுளை நிகழ்த்துவோர் துரோகிகள் என புலிகளால் முத்திரை குத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று அவ்வாறு முத்திரை குத்திய அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முடியாதவர்களாகவுள்ளனர். அவ்வாறு எவரும் அஞ்சலி செலுத்தினால் அவர்கள் மீது துரோகிகள் முத்திரை குத்தப்படும் நிலைமை காணப்படுகின்றது.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com