Saturday, July 24, 2010

நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மரணம்.

எல்விட்டிகலவீதி நாராயம்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் நீச்சல் தடாகத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் காண்ஸ்டபிளும் அவரது பயிற்றுவிப்பாளரான அதிகாரியும் நீரினுள் முழ்கி மரணமடைந்துள்ளனர். பொலிஸ் காண்ஸ்டபிள் நீரில் மூழ்கியபோது அவரை காப்பாற்றச் சென்ற பயிற்றுவிப்பாளரும் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment