Friday, July 2, 2010

முதன்முறையாக இலங்கையில் கல்லீரல் மாற்றுச் சிகிச்சை.

இலங்கையில் முதன் முறையாக கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை ஒன்றை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன தலைமையிலான வைத்திய நிபுணர்கள் வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இதுவரை காலமும் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் பயணித்து இச்சத்திர சிகிச்சையைச் வேண்டிய நிலை இலங்கையர்களுக்கு இருந்தது. அத்துடன் இதற்காக சுமார் 50 இலட்சம் ரூபா வரையில் செலவிடவும் நேர்ந்தது.

இந்நிலையில் குறித்த சத்திர சிகிச்சையை இலங்கையிலேயே மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இன்று வெற்றியளித்த இந்த சத்திர சிகிச்சையானது 40 வயதுடைய ஒரு நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது. விபத்தொன்றினால் மூளை செயலிழந்து மீண்டும் வாழவைக்க முடியாத நிலையிலுள்ள நோயாளி அவயங்களை அவரது இரத்த உறவுகளின் ஒப்புதலுடன் பெற்றுக்கொண்டு மேற்படி கல்லீரல் மாற்று சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட கல்லீரலை உரியவரிடமிருந்து கழற்றுவதற்கும் அதை மீண்டும் பெருத்துவதற்கும் சரியாக 24 மணித்தியாலயங்கள் எடுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com