Saturday, July 3, 2010

மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

மாகாணசபைகளுக்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கான சலுகைகளை வழங்கும் விவகாரத்தில் அரசாங்கம் மாற்றான்தாய் கொள்கையையே கடைபிடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி, வெளிவிவகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களைத் தவிர ஏனைய அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வரி அறவீடு செய்வதற்கான அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் மாகாணசபைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மட்டுமே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு வரி அறவீடு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டால் மாகாணங்களுக்கு இடையில் ஆரோக்கியமான போட்டி உருவாகும் எனவும், இதனால் அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தினால் தற்போது மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள், சம்பளக் கொடுப்பனவுகளுக்கே போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com