Thursday, July 1, 2010

தலைவர்கள் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது!

பேராசிரியர் சிற்றம்பலம் குற்றச்சாட்டு!கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய ஒழுங்குகள் யாவும் தமிழரசுக் கட்சியின் தலைவரான திரு. இரா. சம்பந்தன் தலைமையில் பூர்த்தியாகிவிட்டன. இதனை இட்டு இக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் 1956ஆம் ஆண்டு தொடக்கம் இக்கட்சியின் இலட்சியத்திலிருந்து இம்மியும் விலகாது பேசியும் எழுதியும் செயற்பட்டும் வருபவனாகிய நாம் அதிர்ச்சியடைந்தோம்.

இத்தகைய அதிர்ச்சியில் தான் வடக்குக் கிழக்கு மாகாணத்திலுள்ள கட்சித் தொண்டர்களும் உறைந்திருந்ததை அவர்கள் நம் முடன் மேற்கொண்ட தொடர்புகள் மூலம் அறிந்து கொண்டேன் என யாழ். பல்கலைக் கழகத்தின் ஓய்வு நிலைத் சிரேஷ்ட பேராசிரியரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பேரா சிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இங்கு பிரசுரமாகின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக நேற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.)

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியை 1949 ஆம் ஆண்டில் தந்தை செல்வநாயகம் அவர்கள் ஆரம்பித்தபோது அதனை வெறும் கட்சியாக மட்டும் இனங்காணாது தமிழ் மக்களுக்கு விமோசனமளிக்கும் ஒரு இயக்கமாகவே இனங்கண்டார். இத்தகைய இயக்கம் தமிழ் மொழி பேசும் வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் ஒரு சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே அவரது கனவாகும்.

இதனால்தான் தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளின் சின்னமாக ‘வீடு’ (வீடுபேறு அளிப்பது) அமைந்தது. தந்தை செல்வநாயகம், தலைவர் அமிர் தலிங்கம் போன்ற தலைவர்களின் பாதங்கள் வடக்குக் கிழக்கின் பட்டிதொட்டியயங்கும் படியத் தமிழ்த் தேசியம் வலுவான சக்தியாக உருவெடுத்தது. தலைவர்களினதும் தியாகத்தாலும் தொண்டர்களது அர்ப்பணிப்பாலும் அப்பளுக்கற்ற தியாகத்தாலும் வடக்குக் கிழக்கு மாகாண மக்களின் இதயங்களில் வீட்டுச் சின்னமே தமக்கு விமோசனமளிப்பது என்ற எண்ணக்கரு உருவாகி ஆல விருட்சமாக வளர்ச்சி பெற்றது.

தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டங்களும் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் ஏனைய தமிழ்க் கட்சிகளை விட இதனை முதன்மை நிலைக்கு இட்டச் சென்றன. இருந்தும் நமக்குள் ஏட்டிக்குப்போட்டி போடும் அரசியலைத் தவிர்க்கும் நோக்கில் இக் கட்சி தமிழ்க் காங்கிரஸுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக உதயசூரியன் சின்னத்தில் இயங்கினாலும் அதன் முதன்மையும் தனித்துவமும் இக்கூட்டமைப்பில் பேணப்பட்டது.

எனினும் சித்தாந்த ரீதியிலன்றி வெறும் ஒற்றுமைக்கான கூட்டமைப்பு என்ற கோ­த்தின் அடிப்படையில் ஏற்பட்ட இவ்விணைப் பின் விபரீத விளைவுகளை அண்மைக்கால சம்பவங்கள் மட்டுமன்றி நடந்து முடிந்த தேர் தலும் துலாம்பரமாக எடுத்துக் காட்டியுள்ளது.

வீட்டை விரும்பிய புலிகள்

தமிழரசுக் கட்சியின் வீடுதான் தமிழர் தாயகத்தை இணைக்கும் மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியமுடைய சின்னம் என்பதாலும் ஏனைய தமிழ்க் கட்சிகளைப் போலன்றி வடக்குக் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் வியாபித்துள்ள கட்சி என்பதாலும் 2004 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவான போது இதிலேதான் இக் கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டி போட வேண்டும் என்று விடுதலைப்புலிகளும் விரும்பினர்.

இதனை ஏனைய கட்சிகளும் ஏற்றன. அன்று இக் கூட்டமைப்பு உருவானபோது நல்லிணக்க அடிப்படையில்தான் ஒவ்வொரு கட்சியும் செயற்பட்டன. எனினும் கடந்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடின்மையும் கடந்த தேர்தலில் நிற்போரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்ட இழு பறிகளும் இதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் ஒருகால் உள்வீட்டுப் பிள்ளைகளாயிருந்து பின்னர் விலகிச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் விதண்டாவாதங்களும் இத் தேர்தலில் போட்டி போட்டோர் பற்றித் தமிழரசுக் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட விமர்சனங்களும் இதன் விளைவாக அவர்கள் மத்தியில் கால்கொண்ட அக்கறையின்மையுமே வட பகுதியில் தமிழரசுக் கட்சியைக் களத்தில் பின்னடையச் செய்தன. கட்சியாகப் பதிவு தேவைதானா?

இப் பின்னணியில் அதுவும் கடந்த கால அனுபவங்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்தல் காலத்தின் தேவைதானா? என்பது பற்றி மிக ஆழமாக சிந்திக்க வேண்டியதொன்றாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கட்டாயம் ஒரு கட்சியாகப் பதிவு செய்தல் வேண்டும் என்பதில் தலைவர்கள் முரண்பிடித்து ஒரு தலைப்பட்சமாகத் தீர்மானிக்க முடியாது. மிக நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தையுடைய இக் கட்சியின் இதற்கான வழிமுறைகள் பல உள.

மத்திய குழு, பொதுச்சபை ஆகியவற்றினுள் இது பற்றி விவாதிக்கப்படல் வேண்டும். இவையே கட்சியின் கொள்கை எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை வகிக்கும் கருவிகளாகும். மாநாடு முடிந்து ஆறு மாதங்கள் ஆகி யும் இவற்றைக் கூட்டிக் கட்சித் தொண்டர்க ளுடன் கருத்துக்களைப் பரிமாறத் தலைமைப் பீடம் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத சூழலில் மத்திய குழுவைக் கூட் டும்படி 02.06.2010 இல் தலைவர்/செயலா ளர் ஆகியோருக்குக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் என்ற ரீதியில் ஒரு கடிதத்தினை அனுப்பியிருந்தோம்.

இற்றைவரை கடிதம் கிடைத்தது என்று கூடப் பதில் இல்லை. தன்னிச்சையான செயற்பாடுபொதுவாகக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் தலைமைப்பீடம் தங்களைக் கலந்தா லோசிக்காது தன்னிச்சையாகச் செயற்படுகின்றது என்ற கருத்து நிலவுகின்றது. தலைமைப் பீடம் எதேச்சையாக செயற்பட்டதை அண்மைக்கால நிகழ்வுகளும் எடுத்துக் காட்டியுள்ளன.

எவ்வாறிருப்பினும் மிக நீண்ட ஜனநாயகப் பின்னணியுடைய இக் கட்சியில் இத்த கைய போக்கினை அனுமதிக்க முடியாது. இதனால் கட்சியின் எதிர்கால ஆரோக்கியமான வளர்ச்சி தடைப்பட்டு விடும். எதுவித இலட்சியப்பற்றுமற்ற வெறும் வழிப்போக்கர்கள்தான் கட்சியில் நுழைந்து தொண்டர்களுக்கு ஆணையிடும் நிலை ஏற்படும். இது மிக மிக ஆபத்தான நிலையாகும்.

இத்தகைய நிலை வெள்ளைக் கையர்களாக எமது மறைந்த தலைவர்களது தியாகத்திற்கும் எமது ஜனநாயகப் பாரம்பரியத்திற்கும் அழிவைத் தேடித் தந்தே விடும். எனினும் இனியும் காலம் தாழ்த்தாது உட னே கட்சியின் மத்திய குழுவையும் பொதுக் குழுவையும் கூட்டல் வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும் நடவடிக்கை பற்றி அலசி ஆராயப்பட வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்படும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் யாது என் பதில் தெளிவு வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டுச் சின்னத்தைத் பரிமாற்றம்செய்ய முடியாது. விலைபேசவும் முடியாது. காரணம் இன்று இவ் வீட்டுச் சின்னம் தமிழரசுக் கட்சி யின் தியாகிகளின் நினைவாலயமாகவும் மிளிர்கின்றது.

கண்ணீராலும் செந்நீராலும் வளர்க்கப்பட்ட கட்சி

தலைவர்களினதும் தொண்டர்களினதும் கண்ணீராலும் செந்நீராலும் வளர்க்கப்பட்ட இத் தமிழரசுக் கட்சி என்ற ஆல மரத்தைப் புதுமுகங்கள் வெட்டித் தறிக்கத் தமிழரசுக் கட் சியின் தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு இடம் கொடுத்தால் இப் புதுமுகங்களே தாம்தாம் நவயுக தியாகிகள் எனத் தம் பட்டம் அடித்துக் கொண்டு எமது தலைவர்கள் செய்த தியாகத்தையும் எம் கட்சியின் தியாக வரலாற்றையும் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள்.

இவ்வாறு நடைபெற்றால் தந்தை செல்வ நாயகம், கோப்பாய் கோமான் வன்னியசிங் கம், இரும்பு மனிதன் நாகநாதன், திருமலை இராசவரோதயம், பட்டிருப்பு இராசமாணிக் கம், தலைவர் அமிர்தலிங்கம் போன்றோரை யும் அவர்களின் பங்களிப்புகளையும் எதிர் கால சந்ததியினர் அறியாவண்ணம் இவ் நவஉலகத் தியாகிகள் புறந்தள்ளி விடுவார்கள்.

நீதிமன்றம் செல்வோம்

இன்றெல்லாம் கட்சிகளைப் புனரமைக் கும் பணி நடைபெறுகின்றது. இத்த கைய பணியிலேயேதான் இலங்கைத் தமிழ ரசுக் கட்சியும் இனியும் காலம் தாழ்த்தாது இற ங்க வேண்டும். எவராவது தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின் னத்தையோ அன்றி அதன் கொடியையோ சுய நலத்திற்காக விலைபேச முற்பட்டால் நீதி மன்றம் சென்றாவது இதனைத் தடுத்து நிறுத் துதல் ஒவ்வொரு தமிழரசுக் கட்சியின் தொண் டனின் தலையாய கடமை என்று வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க கூறியதுபோன்று இன்று அரசியல் என்பது பொய்யும் புரட்டும் புளுகும் நிறைந்த வியாபாரமாகி விட்டது. உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பன தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதி களால் தம் புகழ்பாட இதய சுத்தியின்றி உச்சரிக்கப்படும்.

No comments:

Post a Comment