வவுனியா பிரதேசத்தில் நேற்றிரவு நபரொருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடத்தப்பட்டுள்ளவர் ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான செட்டியின் மைத்துனராவர். இவர் வவுனியாவில் ரெஸ்ருரண்ட் ஒன்றை நாடாத்தி வந்துள்ளார். நேற்றிரவு கைத்துப்பாக்கிகளுடன் வாகனமொன்றில் வந்திறங்கிய சுமார் 5 பேர் கொண்ட குழுவொன்று குறிப்பிட்ட நபரையும் அவருடனிருந்த ஞானி என்பவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த ஞானி தன்னை கடத்தல்காரர்கள் வாகனத்திலிருந்து தள்ளி உதைத்துவிட்டுச் சென்றதாக கூறியுள்ளார். இவர் சிறிரெலோ உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது கட்தல்காரர்கள் 50 லட்சம் கப்பம் கோரிவருவதாக தெரியவருகின்றது.
வினை விதைத்து வினை அறுப்பது போல், அன்று செய்த பாவங்களுக்கு இன்று பரிகாரம் கிடைக்கின்றது.
ReplyDeleteகடவுளின் தண்டனைக்கு எவரும் தப்ப முடியாது.
Yaar vithaiththathu yaar aruppathu
ReplyDeleteIngu naam yaarai patri kathaikkirom