Monday, July 5, 2010

இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16,011 பேர் பணி நீக்கம்

இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16,011 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டு யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மூன்று தடவைகள் இவர்கள் மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்கும் , இராணுவத்திலிருந்து விலகிச் செல்வதற்கும் பாதுகாப்பு அமைச்சினால் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த பொது மன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான படையினர் சேவையிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி முடிவடைந்த மூன்றாது பொது மன்னிப்புக் காலத்தில் மட்டும் 2,062பேர் அதிகாரப்பூர்வமாக பணியிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment