Thursday, July 1, 2010

டக்ளஸ் விஜயகலா பாராளுமன்றில் கடும் வாய்த்தர்க்கம். 100 மில்லின் மான நஷ்டம்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகால மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த விஜயகால மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். எனினும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரமே பயன்களை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட டக்ளஸ் தேவானந்தா, நீங்கள் அப்படி யாரை குறிப்பிடுகின்றீர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜயகால மகேஸ்வரன் அரசாங்கத்தில் பல கட்சிகள் இருப்பதாகவும் குற்றம் செய்தவர்களுக்கே உறுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒலி வாங்கி முடக்கிவிடப்படாத நிலையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

வாய்த்தார்க்கம் சூடானபோது நீங்கள் தானே மகேஸ்வரனை கொலை செய்தீர்கள் என்று டக்ளஸ் தேவானந்தாவை பார்த்து சிங்கள மொழியில் ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.

இவர்கள் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற போது ஆளும் தரப்பினர் கூச்சலிட்டனர். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விஜயகால மகேஸ்வரனுக்கு ஆதராவாக கூச்சலிட்டனர்.

விஜயகால மகேஸ்வரனின் உரை முடிந்ததும் அவையிலிருந்த எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதே நேரம் சபையில் பேசிய பா.உ விஜயகலா , டக்களஸ் தேவானந்தா தன்மீது திட்டமிட்டவகையில் அபாண்டமான பழியை சுமத்தி வருவதாகவும் , இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்திக்கான நஷ்ட ஈடு கோரி நீதிமன்று செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் , வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கும் டக்ளஸ் தேவானந்தா , நான் கொழும்பிலிந்து காடையர்களை கொண்டுவந்து திலிபனின் சிலையை உடைத்தாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் அபாண்டமான குற்றச்சாட்டு இதற்காக நான் மான நஷ்டமாக 100 மில்லியன் ரூபாய்களை கோரவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  July 2, 2010 at 6:39 AM  

அரசியலில் சுத்தமானவர்கள் என்று எவரும் இருக்கமுடியாது.

அதிலும் இலங்கை அரசியலை சொல்லி வேலையில்லை.

அசல் சாக்கடை தான். அப்பாவி இலங்கை மக்கள் நிலை மிகப் பரிதாபம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com