Tuesday, July 6, 2010

சித்திரப் போட்டியில் வவுனியா தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு 1ம் இடம்.

தேசிய தபால் அருங்காட்சியகம் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது புதிய முத்திரைக்கான உருவப்படத்தை வரைந்த மாணவிக்கு ஜனாதிபதி பணப்பரிசையும் அன்பளிப்பையும் வழங்கினார்.

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த தாட்சாயினி ஜெயராசசிங்கத்திற்கு ஜனாதிபதி பரிசை வழங்கினார்.

No comments:

Post a Comment