Friday, June 25, 2010

யாழ் , வவுனியா நீதிபதிகள் இடமாற்றம். ஈபிடிபி மீதுகுற்றச்சாட்டு.

யாழ். சாவகச்சேரி நீதிபதி ரி.ஜே பிரபாகரன் , வவுனியா நீதிபதி அலெக்ஸ் ராஜா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விடமாற்றங்கள் ஈபிடிபி யினரின் அரசியல் அழுத்தம் காரணமாக இடம்பெற்றிருக்கவேண்டும் என பலராலும் எதிர்பார்க்கபடுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அரசியல் கட்சி ஒன்றின் அழுத்தம் காரணமாகவே இவ் இடமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்விரு நீதிபதிகளும் இக்கட்சி உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாவக்சேரியில் கடத்தப்பட்டு கப்பத்திற்காக கொலை செய்யப்பட்ட கபில்நாத் எனும் மாணவனின் சம்பவத்துடன் ஈபிடிபியினர் சம்பந்தப்பட்டிருந்தாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இவ்வழக்கினை நீதிபதி பிரபாகரன் விசாரணை செய்து வந்தார்.

இவ்விடயத்தில் யாழ் நீதித்துறைக்கும் ஈபிடிபி யினருக்குமிடையே ஒர் பனிப்போர் மூண்டிருந்ததை மறுப்பதற்கில்லை.

சாதாரண மொட்டைக் கடிதம் ஒன்றினை வைத்து நீதிபதி சட்டத்துறையையும் பொலிஸாரையும் தவறான முறையில் வழிநடாத்தினார் என்ற குற்றச்சாட்டுக்களும் பிரதேச மக்களிடையே காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

No comments:

Post a Comment