Monday, June 14, 2010

புலி ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் வீ.நாரயணசாமி தெரிவித்துள்ளார். தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்புக்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் இந்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார். எவ்வாறெனினும், தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் அமைப்புக்களின் பெயர் விபரங்களை அவர் வெளியிடவில்லை.

பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக இந்தியாவின் சகல கட்சிகளும் கூட்டாக போராட வேண்டுமெனவும், இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாதம் தலைதூக்குவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் மத்திய அரசாங்கமோ அல்லது தமிழக அரசாங்கமே கூடுதல் சிரத்தை காட்டவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com