Wednesday, June 2, 2010

வடக்கில் இராணுவ முகாம்கள் குறைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினர்.

வடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினர் முகாம்களை அமைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. வடமாகாணத்தில் முற்றிலும் சிவில் நிர்வாகத்தை நிறுவும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பிரதேச அமைதி மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பர் எனக் கூறப்படுகின்றது. கலகம் அடக்குதல் சிவில் சமூகத்தினுள்ளிருந்து எழும்பக்கூடிய கிளர்சிகள் சம்பந்தமான புலனாய்வு என்பவற்றில் விசேட பயிற்சி பெற்றுள்ள அதிரடிப்படையினர் எதிர்வரும் வாரம் கிளிநொச்சி நகரிலும் பின்னர் பூநகரி முல்லைத்தீவு சாவக்சேரி பிரதேசங்களிலும் முகாம்களை அமைக்கவுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com