Tuesday, June 1, 2010

சீபா தொடர்பாக நேரடி வாதத்திற்கு வாருங்கள் : அனுரகுமார திஸாநாயக்க

இலங்கை இந்தியா விடையே செய்து கொள்ளப்படவுள்ள சீபா எனப்படும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நேரடி விவாதம் ஒன்றினை பாராளுமன்றில் மேற்கொள்ள அனுமதி கோரவுள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் ஜேவிபி யின் முக்கியஸ்தருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது பிரபல்யமாக பேசப்படுகின்ற இவ் ஒப்பதந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த 2008ம் ஆண்டு இலங்கையில் சார்க் நாடுகளுக்கான உச்சிமாநாடு இடம்பெற்றபோது பேசப்பட்டதாகவும் அதற்கான ஒப்பந்தம் தற்போதே கைச்சாத்தாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி ஒப்பந்தத்தினை மேற்கொள்ள கூடாது என வலியுறுத்தி கொழும்பு வர்த்தகசங்கத்தின் ஒரு பிரிவினர் லிபர்டி சுற்றுவட்டாரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் ஜனாதியை சந்தித்து பேசியபோது , இலங்கைக்கு பாதகம் ஏற்படக்கூடிய எந்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என ஜனாதிபதி தெரிவித்திருந்தாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com