Monday, June 7, 2010

கல்முனையில் ஆயுதங்கள் மீட்பு.

கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள தேவ சாந்தி என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்றில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன அம்பாறைப் மற்றும் கல்முனை பொலிஸார் வெள்ளிக்கிழமை காலை முதல் பாண்டிருப்பு பிரதேசத்தை சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர் அதன்போது மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை செய்திகள் தெரிவிக்கின்றது.

இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் இரகசிய தகவல் ஒன்றை அடுத்து செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டு பின்பகுதியில் உரப்பையினுள் கிரிஸ் பூசிய நிலையில் பீப்பாய் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர் . இந்த ஆயுதங்களை வைத்திருந்தார் என்கிற சந்தேகத்தில் பேரில் வீட்டு உரிமையாளரான பொன்னையா தேவ சாந்தி -வயது 40- என்ற பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார் .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com