Wednesday, June 2, 2010

கனடா புலி ஊடகங்களிடையே மோதல் : உண்மைகள் வெளிவருகின்றது. நிதிமோசடியாம்!!!

உண்மைகள் முற்றிலும் காற்று நிரப்பிய பந்தின் தன்னையை உடையவை. அவற்றை எவ்வாறு அமுழ்தினாலும் வெளிவரும் தன்மையே அதன் சிறப்பம்சமாகும். அதனடிப்படையில் புலிகளுடன் இணைந்து நின்று மக்களை ஏமாற்றிய ஊடகங்கள் , ஊடகவியலாளர்களிடையே பெரும் மோதல் வெடித்துள்ளதுடன் புலித்தலமைமையினால் நியமிக்கப்பட்டிருந்த நிர்வாகப் பொறுப்பாளர்களை தொடர்ந்தும் இவ் ஊடகவியலாளர்கள் ஏற்க மறுத்துள்ளதுடன் சில உண்மைகளை மின்னஞ்சல் மூலமாக சக ஊடகவியலாளர்களுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். அம் மின்னஞ்சலின் முழுவடிவம் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக மிகவிரைவில் மக்களுக்கு அறியத்தர இலங்கைநெற் முயற்சிக்கின்றது. புலிகளின் தலைமை மற்றும் ஊடகவியலாளர்களிடையே பணம் மற்றும் பதவிகளில் போட்டி ஏற்பட்டுள்ளபோதும் அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தாமல், தம்மிடையே இணக்கங்களை ஏற்படுத்தி தொடர்ந்தும் மக்கள் முதுகில் சவாரி செய்ய முற்படும் இத்தரப்பினரின் உண்மை முகம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.


அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே!

உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள்!


கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம்.

இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் செலவு செய்யும் நேரத்திற்கும் எமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சம்பந்தமேயில்லாத அளவிற்கு நாங்கள் பல மணித்துளிகளை இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இப்போது இடம்பெறும் இந்த நிகழ்வு நூற்றுக்கு மேற்பட்ட எங்களது வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ள படியால் உங்கள் முன் உண்மைகளை வைக்கிறோம்.

தாயகத்தில் எமக்காகப் போராடிய உறவுகள் மௌனித்துப் போனதும் இங்கே நிலைமை தலைகீழாக மாறியது. இந்த மூன்று ஊடகங்களையும் நிர்வகிக்க என தாயகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தனிமனிதனால் அடக்கு முறையாகவே நடத்தப்பட்டு வந்தோம்.

இந் நிலையிலேயே இந்த ஊடககங்களை தனது சொந்தச் சொத்து எனக் கூறி “அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி சுவீகரிக்க முற்பட்டார். எங்களிடமே பலமுறை இது பொதுப் பணமல்ல, எனது சொந்தப் பணம் என்று உண்மைக்கு மாறாக கதைக்க முற்பட்டார். ஆனால் அவர் எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த நிலையிலேயே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரு பொது நிறுவனம் கையேற்க வேண்டுகோள் எங்கள் மத்தியில் வலுப்பெற்றது. எங்களது உணர்வுகளைப் பிரதிபலித்து இதையே தான் ரி.வி.ஐ. நிர்வாகமும் தற்போது செய்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.

மக்களாகிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ரி.வி.ஐ. நிர்வாகத்தினர் ஏதோ தனியாகப் பிரிந்து போவதாகக் கூறப்படும் கதையில் உண்மையில்லை. ரி.வி.ஐ நிர்வாகத்தினர் தனியார் கபடமாக அபகரிக்க முற்பட்ட தமிழர்களின் சொத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே முழுப்பிழையும் சி.எம்.ஆர் – சி.ரீ.ஆர் நிறுவனங்களை இப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நபரையே சாரும்.

ரி.வி.ஐ நிர்வாகம் கேட்பது தான் எமது கோரிக்கையும் என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறோம். இந்த மூன்று நிர்வாகங்களையும் ஒரு பொது அமைப்பின் (trustee company) கீழ் கொண்டு வாருங்கள். ஊழியர்களிற்கு தகுந்த சம்பளம் வழங்குங்கள். தனியான ஒரு ஆள் அமைப்பின் பேரால் சுருட்டிச் செல்லும் அநியாயத்தை தடுக்க விரும்புகிறோம்.

ஒரு கிழமையில் ஒரிரு நாட்கள் அலுவலகத்திற்கு வரும் “தாயக அமைப்பால்” நியமிக்கப்பட்ட நிர்வாகி 150,000 டொலர்களை வருடச் சம்பளமாகவும் கார், விமானச்சீட்டு என ஏனைய வசதிகளையும் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு பெற நாங்களோ மணிக்கு 15 டொலர்களையே பெறுகிறோம். இந்த நபர் இரண்டு வருடங்களிற்கு முன்பே திடீரெனக் கொண்டு வந்து புகுத்தப்பட்டவர். ஆனால் நாங்கள் 7 வருடங்களிற்கு மேலாக இந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறோம். இதைவிடக் கொடுமைபல ஊதிய விவகாரத்திலும் ஏனையவற்றிலும் இடம்பெறுகின்றன.

குறிப்பாக 3,500 டொலர்கள் பெறப்படும் ஒரு மணி நேர நேரடி விளம்பர ஒளிபரப்பிற்கு நாங்கள் குறைந்தது 6 மணித்தியாலங்களை அந்த நேரடி ஒளிபரப்பு நடைபெறும் கடையில் செலவளிப்போம். ஆனால் எங்களிற்கு தரப்படுவது வெறும் 100 டொலர்கள் மட்டுமே. இது ஒரு ஜனநாயக விரோத செயலாக இருந்தும் நாங்கள் தொடர்ந்து பணி புரிகிறோம்.

எனவே ரி.வி.ஐ. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று நிறுவனங்களiயும் கனடாத் தமிழ் மக்கள் ஒரு பொது நிறுவனத்தின் மேற்பார்வையில் கொண்டு வந்து தனிநபர்கள் பொது மக்களின் சொத்துக்களை அபகரிப்பதைத் தடுக்க பணிவாக வேண்டிக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வந்து எமது பிரச்சினையை முன்னெடுத்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்.

- பாதிக்ப்பட்ட ஊடகவியலாளர்கள், தமிழ் விசன் தொலைக்காட்சி, கனடியப் பல்கலாச்சார வானொலி, கனடியத் தமிழ் வானொலி.

1 comments :

kanaganna ,  June 2, 2010 at 3:15 PM  

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” இது தமிழனின் கௌரவத்தை உயர்த்துவதற்கு எழுதிய வரிகள். வரிகள் இப்படியிருக்கும் போது செயல்கள் இழிவாக இருந்தால் தலை குனிந்துதான் ஆகவேண்டும். தொழிலாளி என்பவன் யார்? தொழில் புரிபவன். முதலாளி என்பவன் தொழில் அளிப்பவன். இருவரும் பங்காளிகள் என்று எண்ணாத வரையில் தொழில் ஸ்தாபனம் பலகாலம் நீடிக்காது. சில வேளைகளில் மணிக்கணக்கே தாக்குப் பிடிக்காது. ஆனால் ஆண்டான் அடிமைக் காலங்களில் இச் சம்பவம் சாத்தியமாக இருந்தது, காரணம் ஒருவனிடம் சகிப்புத் தன்மை இருந்தமைக்குக் குடும்ப சூழ்நிலை, பயம், தெரிந்த தொழில் அது ஒன்றே என்றதாலும், அடுத்து என்ன செய்வதென்ற அறியாமை ஆட்கொண்டதாலும் அன்று அவன் அப்படி ஆடும் பொம்மையாக்கப் பட்டான். ஆனால் இன்று பெரிய உலகம் சிறிதாக்கப் பட்டுள்ளது, அப்படிப் பட்ட காலத்திலும் சில இடங்களில், இப்படிப் பட்ட செயல்கள் நடை பெறுகிறது அதுவும் சுதந்திரம் வேண்டிப் போராடியதாகக் கூறும் இனங்களின் ஸ்தாபனத்திலா? அப்படி என்றால் இதுவரை போராட்டம் என்ற நாடகமா நடந்தது? இதைத்தானா மக்கள் உண்மை என நம்பினார்கள், இனியும் மக்களின் நம்பிக்கையில் மண்தூவ எத்தனிக்க வேண்டவே வேண்டாம். அப்படி நம்பிக்கையை மோசடி பண்ணியோர் தாம், தெரியாமல் செய்த தவறை உடனடியாகத் திருத்திக் கொள்ளல் வேண்டும், பரிகாரமும் உடன் தேட வேண்டும். ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க அறிவு, தொழிற் திறமை, மக்கள் தொடர்பு, உபகரணங்கள், நுகர்வோர், பொருளாதாரம் யாவும் தேவை. இதில் ஒன்றை ஒன்றுதனும் பகைத்தாலும், ஸ்தாபனம் பொருளாதார அழிவை, தொழில் அழிவை, நுகர்வோர் அழிவை சந்தித்து, அதை ஆக்கச் செல்வளித்த பொன்னான நேரத்தையும் இழந்து விடும். நேரம் பொன்னானது என்பதை அறிந்தவர்கள் செய்வார்களா? செய்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அன்று, ஐயா நீங்கள் போட்ட பிச்சை, நான் உங்கள் அடிமை, உங்கள் உப்பைத் தின்று வாழுபவன், உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு உண்டோ, இவையாவும், பழைய பேச்சுக்கள். ஆனால் இன்று சுதந்திரம் என்று பேசும் யுகமான மக்கள் ஆட்சி, பழையவை இங்கே செல்லாது. புதியவை வணக்கம், நன்றி, தவறிற்கு மன்னிப்புக் கோருதல், நான் நேர்மையாகச் செய்யும் வேலைக்குத் தகுந்த ஊதியம், சுகாதாரமுள்ள சுற்றாடல், தொழில், தொழிலாளர் பாதுகாப்பு, தொழில், தொழிலாளர் மதிப்பு, இவை போன்ற கௌரவங்கள் கொடுக்கவும், தரவும் செய்தல் வேண்டும்.
தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது, தவறு செய்தவன் திருந்தியாகணும், தப்புச் செய்தவன் வருந்தியாகணும்.
செய்யும் தொழிலே தெய்வம் அதன் திமைதான் நமது செல்வம் என்பதை உணர்பவன் தொழிலாளி, அவன் பங்கை உணர்ந்து அவனைப் பங்காளி ஆக்குபவன்தான் விழுப்பத்து வேண்டும் முதலாளி!
குற்றமெனின் மக்களின் விழிப்பே மகேசனின் நெற்றிக் கண்!
உங்கள்,
கனகண்ணா

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com