Saturday, June 26, 2010

பயங்கரவாதத்தை முறியடிக்க சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை: இந்தியா

தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும், பயங்கரவாதத்தை முறியடிக்க சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை என்றும் இந்தியா அறைகூவல் விடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்று பேசுகையில் இதனைக் கூறிய இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல், சார்க் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளதோடு, பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.

சார்க் பிராந்தியம் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதை நாம் அனைவருமே சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயம் ஒப்புக்கொள்வோம்.

சார்க் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான ஒரே வழி, பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை பறிமாறிக்கொள்வதில் நம்மிடையே முழுமையான ஒத்துழைப்பு இருப்பதுதான் என்று சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment