Friday, June 4, 2010

எமது தேவைகளை கவனியுங்கள் : தருமபுரம் மக்கள் சிறிதரனிடம் விசனம்.

ஏகப்பட்ட உறுதிமொழிகளுடன் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்று தெரிவாகியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழமைபோல் தலைநகரில் குடிகொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைவிடும் தம் பணியை சிறப்பாக செய்துவருதையிட்டு விசனம் அடைந்துள்ள தருமபுரம் மக்கள், கடந்த தேர்தலில் பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அப்பிரதேசத்திற்கு தனது பிரத்தியேக தேவைக்காக சென்றபோது அவரை சுற்றிவளைத்து எமது வாக்குகளை பெற்று பாராளுமன்று சென்றீர்களானால் எமது தேவைகளிலும் கவனம் செலுத்துங்கள் என மிகவும் கண்டிப்பாக கேட்டுக்கொண்டதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறாயினும் மக்களின் இவ் அதிருப்தியை இருட்டடிப்புச் செய்த பா.உ தான் அப்பிரதேசத்திற்கு சென்றபோது மக்கள் தன்னிடம் தமது தேவைகள் குறித்து வேண்டுகோள் விடுத்ததாக தனது சகோதரனின் இணையத்தளமூடாக பரப்புரை செய்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் வன்னியில் புலிகளியக்கதிலிருந்த உயிரிழந்த உறுப்பினர்களுக்கான நினைவுச் சிலைகள் மற்றும் நினைவாலயங்களை தொடர்ந்தும் தனது பிரதேசத்தில் வைத்துக்கொள்வதற்காக உழைப்பேன் என அவர் தெரிவித்திருந்தமை தொடர்பாகவும் அவரிடம் மக்கள் வினவியாதாகவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com