Tuesday, June 29, 2010

சரத் பொன்சேக்கா தாக்கல் செய்ய மனு நிராகரிப்பு.

ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை இடைநிறுத்த கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளாது அதனை நிராகரிப்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் சத்தியா ஹெட்டிகே இந்த தீர்ப்பை அறிவித்தார். மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அதில் வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என நீதியரசர் ஹெட்டிகே குறிப்பிட்டார். இதனையடுத்து, மூவரடங்கிய நீதியரசர்கள் குழு மனுவை விசாரணைக்கு எடுக்காது அதனை நிராகரித்தது.

No comments:

Post a Comment