Sunday, June 20, 2010

ஜெயல‌லிதா கூறுவது போ‌ல் த‌மிழ‌ர்களு‌க்கு எ‌ந்த ஆப‌த்து‌ம் வராது: தங்கபாலு

சீன கைதிகள் இலங்கையில் குடியமர்த்தப்ப‌ட்டு வருவதா‌ல் இ‌ந்‌தியாவு‌க்கு ஆப‌த்து‌ எ‌ன்று ஜெயலலிதா கூறி இரு‌ப்பதுபோ‌ல் இந்தியாவுக்கோ, தமிழர்களுக்கோ எந்த ஆப‌த்தும் வராது எ‌ன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் அ‌கில இ‌ந்‌திய பொது‌ச் செயல‌ர் ராகுல் காந்தி‌யி‌ன் 40வது பிறந்தநாள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பேசுகை‌யி‌ல், இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் மத்திய- மாநில அரசுகள்தான் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது. ஜெயலலிதா போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தவறாக திரித்து கூறுவதையும், அறிக்கை வெளியிடுவதையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசுதான் செய்கிறது. தி.மு.க., காங்கிரஸ் எடுக்கும் முயற்சிதான் இதில் உறுதியாக உள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்து கிறார்கள், அறிக்கை விடுபவர் சார்பில் எதுவும் செய்ய முடியாது.

காங்கிரஸ் அரசியல் நாடகம் நடத்தவில்லை. சீன கைதிகள் இலங்கையில் குடியமர்த்தப்படுவதாகவும் ஜெயலலிதா கூறி இருக்கிறார். இதனால் இந்தியாவுக்கோ தமிழர்களுக்கோ எந்த பிரச்சனையும் வராமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். தவறாக பிரசாரம் செய்து அவர் நாடகம் நடத்துவது நல்லதல்ல. இன்னும் தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது எ‌ன்று தங்கபாலு கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com