Monday, June 14, 2010

எப்போது எம்வாழ்வில் வசம்தம் வீசும்? ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்.

'இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைத் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக அவர்களின் விடுதலை வேண்டி கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலைக் கைதிகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளகடிதத்தில் மேற்கண்வாறு கேட்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களே ! நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நாம் யுத்தம் முடிவடைந்து ஒருவருடமாகியும் தொடர்ந்து சிறையில் வாடுகின்றோம்.எமது விடுதலை தொடர்பாக எவ்வித கரிசனையும் காட்டப்படவில்லை. கடந்த மூன்று தசாப்தங்கள் நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து அனைத்து மக்களும் சமூக ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் நற்பிரஜைகளாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும்.

கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் போன்ற மனிதாபிமான செயற்பாடுகளை தங்களின் சிறந்த தலைமையில் நடத்திவருகின்றீர்கள். நான்கு சுவர்களுக்குள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாமல் இருக்கும் நாமும் எதிர்காலத்தில் இந்த நாட்டின் நற்பிரஜைகளாக வாழ விரும்புகின்றோம். எப்போது வசந்தம் வீசும்? கடந்த காலங்களில் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர், சமூகப் பெரியோர்கள், அரசியல்வாதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் எம் விடுதலையை துரிதப்படுத்துவதாக உறுதிமொழிகள் கூறியும் எவ்வித முன்னேற்றமும் நன்மையும் ஏற்படவில்லை.

சிறுபான்மை இனம் ஒன்று இல்லை அனைவரும் இந்த நாட்டை நேசிக்கும் மக்களே என்று கூறியுள்ளீர்கள். தமிழ் மக்கள் அனைவரும் இந்தநாட்டில் பயமின்றி சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும். எனவே நீண்டகாலமாக இலங்கையில் உள்ள பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மீது தாங்கள் கருணைகாட்டி எம்வாழ்வுக்கு வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.'

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com