Tuesday, June 29, 2010

இந்தியா எங்களோடு இருந்தால் போதும்: ராஜபக்ச

தமிழர்கள் எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உலக நாடுகளும், ஐ.நா.வுன் என்ன கூறுகின்றன என்பது குறித்து தனக்கு கவலையேதும் இல்லை என்று கூறியுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவும், அண்டை நாடுகளும் தங்களோடு இருந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, போர்க் குற்றங்கள் குறித்து உரிய வகையில் விசாரணை நடத்தாவிட்டால் தாங்கள் அளிக்கும் வரிச் சலுகைகளை இரத்து செய்யப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதே என்று கேட்டதற்கும், “எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை” என்றே பதிலளித்துள்ளார்.

“ஐரோப்பிய ஒன்றியம் வரிச் சலுகையை அளிக்க விரும்பாவிட்டால், அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நாங்கள் என்ன செய்தோம் என்பதை அவர்களுக்கு விளக்கியுள்ளோம், அவ்வளவுதான்” என்று ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க குற்றங்கள் குறித்து ஐரோப்பிய நாடுகளும், ஐ.நா.வும் வலியுறுத்தி வருகின்றனவே என்று கேட்டதற்கு, “நான் ஏன் அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்தியாவும் மற்ற அண்டை நாடுகளும் எங்களோடு நட்புறவுடன் இருந்தால், அது எனக்குப் போதும்” என்று கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com