Wednesday, June 30, 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பு விண்ணப்ப படிவத்தினை வழங்கியது

பதிவு செய்யப்படாத மற்றும் புதிதாக அரசியல் கட்சிகள் தமது பதிவுகளை செய்யக்கூடிய இறுதி தினம் இன்று ( ஜூன் 30 ) என தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயக தேசிய முண்னனி மற்றும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட 60 கட்சிகள் தமது விண்ணப்ப படிவங்களை வழங்கியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வன் அடைக்கலநாதன் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான விண்ணப்பத்தை தேர்தல் திணைக்களத்தில் இன்று கையளித்தாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment