Monday, June 28, 2010

ஐ.நா நிபுணர்கள் குழு இன்று முதல் நியூயோர்க்கில் கூடவுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனைகளை பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்‐கீ‐மூன் நியமித்த நிபுணர்கள் குழு இன்று முதல் முறையாக நியூயோர்க்கில் கூடவுள்ளது. குழுவின் தலைவரான மர்சுகி தருஸ்மன், யஷ்மின் சூகா, ஸ:டிபன் ரட்ணர் ஆகியோர் கூடி கலந்துரையாடவுள்ளனர். இந்த பேச்சுகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி அதனை பகிரங்கப்படுத்துவதில்லை என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை அவுஸ்த்ரேலிய ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கிய மர்சுகி தருஸ்மன், யுத்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்திடம் மாத்திரமல்லாது புலிகளுடன் தொடர்புடையவர்களிடமும் சாட்சியங்கள் பெறப்படும் எனக்கூறியுள்ளார்.

இலங்கையிடம் நேரடியாக தகவல்கள் பெறப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அவர், ஐக்கிய நாடுகள் செயலாளரின் அலுவலகத்தின் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார். எனினும் புலிகள் தொடர்பான தகவல்கள் எந்த அமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் என தருஸ்மன் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment