Tuesday, June 15, 2010

புலிகளின் வாகனங்கள் பலவற்றை அமைச்சர் ஒருவர் கம்பஹாவில் விற்றார்.

ஆழும் கட்சியிலுள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் புலிகளுக்கு சொந்தமான பல வாகனங்களை கம்பஹா பிரதேசத்திற்கு கொண்டுவந்து விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

யுத்தத்தின்போது காயமடைந்திருந்த இவ்வாகனங்கள் கம்பஹா பிரதேசத்திலுள்ள கராச் ஒன்றில் திருத்தப்பட்டு அவற்றுக்கு பொய்யான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லான்ட் குருஸர் , மொன்ராரோ , லான்ரோவர் , இன்ரர்கூலர் , துண்டு துழைக்காக வாகனங்கள் , மற்றும் ஒரு கற்றப்பிலர் என 200 மேற்பட்ட அதிவிலையுயர்ந்து வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாகன விற்பனையில் அமைச்சர் 2000 மில்லியன் ரூபாயக்களுக்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும் அச்செய்தி கூறுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com