காசா சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவிப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஆறு கப்பல்களை இஸ்ரேலிய போர்க் கப்பல் தாக்கியதில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒரு துருக்கிய கப்பலில் 10,000 டன் உதவிப் பொருட்கள் ஏற்றப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதில் அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர்களும் பயணித்ததாகக் கூறப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் யாரும் எதுவும் கூறவில்லை. துருக்கிய கப்பலிலிருந்து அல்ஜஜீரா தொலைக்காட்சிக்கு வந்த தகவலின் படி இஸ்ரேலிய கடற்படையினர் கண்மூடித் தனமாக சுட்டதில் கப்பல் கேப்டன் காயமுற்றதாக கூறப் பட்டது.
கப்பல்களை காசா பகுதிக்குள் அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் ராணுவத்தினர் கூறியதாகத் தெரிகிறது. இஸ்ரேலியத் தாக்குதலுக்கு ஹமாஸ் அரசாங்கத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..
இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் 15,000 டன் உதவிப் பொருள்கள் காசா பகுதிக்குள் அனுமதிக்கப் படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு தேவைப்படும் உதவிப் பொருள்களில் இது கால்வாசியே என்று ஐநா கூறுகிறது.
இஸ்ரேலியத் தாக்குதலுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இச்செயல் இருதரப்பு உறவை பாதிக்கும் செயலாகும் என்று துருக்கி அரசாங்கம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment