Sunday, June 6, 2010

சவுதிஅரேபிய இளவரசர்களுக்கு அல்கொய்தா மிரட்டல்.

சவுதி அரேபிய இளவரசர்களைக் கடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய பெண் தீவிரவாதியான ஹய்லா அல்குயாசிரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியா ராணுவம் கைது செய்தது.

இந்த நிலையில், ஹய்லா அல்குயாசிரை விடுதலை செய்யாவிட்டால் சவுதி அரேபியாவின் இளவரசர்கள், மந்திரிகள், அதிகாரிகள் மற்றும் ராணுவ கமாண்டர்களை கடத்துவோம். மேலும், கைது செய்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அல் கொய்தா தீவிரவாதிகளையும் விடுவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தீவிரவாதிகளும், அவர்களது குடும்பத்தினரும் உங்களை கடத்துவார்கள் என்று அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மண்டல கமாண்டர் சயீத் அல்ஷெக்ரி அல் அரேபியா டி.வி. மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com