Monday, June 28, 2010

இளைஞன் ஒருவரின் சடலத்தை கடலில் வீசி விட்டுச் சென்ற சீஐடி அதிகாரி கைது.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலத்தை கடலில் வீசிவிட்டுச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்றை முந்தல் பொலிசார் மடக்கிப்பிடித்ததோடு அதிலிருந்த இருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பிரதம பரிசோதகர் புஸ்பலா சில்வா என பொலிஸ் திணைக்கள அடையாள அட்டையினுடாக தெரிவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இரண்டாமவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ரெஸ்ருறன்ட் ஒன்றின் உரிமையாளரான ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்: இவர்கள் பயணித்த வாகனத்திலிருந்து துப்பாக்கியொன்றும் கொலைக்க பயன்படுத்தப்பட்டதாக சந்தேசிக்கப்படும் கயிறு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

கெப் ரக வாகனம் ஒன்றில் வந்தவர்கள் சடலத்தை பள்ளிவாசல்பாடு எனும் பிரதேசத்தில் கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் இதனைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் வாகன இலக்கம், வர்ணம் போன்ற விபரங்களுடன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், அப்பிரதேசத்தைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் முந்தல் நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிசாரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள நபா இந்தியாவைச் சேர்ந்த 24 வயதுடைய தென்னரசு செல்வராஜா எனவும் , அவர் மேற்படி ஹோட்டலில் சமையல்காரராக வேலை செய்துவந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணைகளில் அவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள அநேநேரம் , உயிரிழந்தவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் உடலத்தை அழிக்கும் நோக்கில் தாம் அவற்றை கடலில் வீசியதாகவும் சந்தேக நபர்கள் விசாரணையின்போது பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புத்தளம் மஜிஸ்ரேட் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டபோது , விசாரணைகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட ஹோட்டல் கல்கிசை மஜிஸ்ரேட் ருஜிர வெலிவத்தை அவர்களின் மேற்பார்வையில் சோதனையிடப்படவுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ளவரின் மனைவி அவருடன் கொழும்பில் வசிந்து வந்துள்ளதுடன் தனது கணவன் பிக் பனானா ரெஸ்ருரண்டில் வேலை செய்துவந்ததாகவும் கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்:

No comments:

Post a Comment