Thursday, June 24, 2010

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடிப்பேச்சு நடத்தினராம்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருதினை உருவாக்கும் நோக்கில் இன்று கட்சித் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்கள் ஒன்றுகூடி கல்துரையாடியுள்ளனர். ஆமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இல்லத்தில் இவ் ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு எனும் விடயத்தில் அனைவரும் ஒன்றுபட முடியுமான என பேசப்பட்டுள்ளதுடன் எவ்வாறான தீர்வொன்றுடன் உடன்படுவது என்ற விடயம் அங்கு பேசப்படவில்லை என கலந்து கொண்ட முக்கியஸ்தர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். அத்துடன் கலந்துரையாடல் முடிவில் தொடர்ந்து பேசுவது எனவும் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இச்சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபிஆர்எல்எப் (நாபா) அணியின் தலைவர் திரு சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சிவாஜிலிங்கம் திரு.சிறிகாந்தா சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் ஈரோஸ் கட்சியின் செயலாளர் திரு பிரபா மனித உரிமைளுக்கான ஆர்வலர் ஷெரீன் சேவியர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment