Friday, June 18, 2010

வீரம் எமது பாரம்பரியச் சொத்து. வெற்றி நாள் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி.

காலிமுகத்திடலில் இடம்பெறும் வெற்றிநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வீரம் என்பது இலங்கை மக்களின் பாரம்பரியச் சொத்து எனவும் அதனை பிறநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி எமக்கு சர்வதேச நாடுகள் விதித்த நிபந்தனைகள் யாவும் தற்போது செல்லுபடியற்றதாகியுள்ளது. பயங்கரவாதத்திற்கு மெருகூட்டிய நாடுகள் இன்று வாயடைத்து நிற்பதுடன் அவர்கள் அப்பயங்கரவாதத்தின் கொடுமையினை ஒருநாள் அனுபவிக்க நேரிடும் எனவும் அது நியதி எனவும் கூறியுள்ளார்.

எமது நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமங்களிலிருந்து படையிலிணைந்துகொண்ட இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட படையினர் இராப்பகல் என்று பராது நித்திரைதுறந்த போசனங்கள் உட்கொள்ளாது நான்கு வருடங்கள் செய்த அர்பணிப்பினால் கிடைத்த பெரும் வெற்றியை வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த கதைகள் கூறி எம்மிடமிருந்து பறித்தெடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நன்றியுணர்வற்றவர்களால் மாத்திரமே அவ்வாறான செயல்களைச் செய்யமுடியும்.

மேலும் எமது பிரச்சினையை நாம் தீர்த்துக்கொள்ள முடியும். இது சர்வதேசத்திற்கு அவசியமானது அல்ல. எம்நாட்டில் யுத்தத்தின்மூலம் இடம்பெயர்ந்துள்ள மக்களை குடியமர்த்தும் விடயங்கள் இவ்வாண்டின் இறுதிக்குள் முடிவடையும்.

2 comments :

Anonymous ,  June 18, 2010 at 1:39 PM  

Appadianaal 1958 il irunthu eththanai thamilarhal kollappaddarhal? ithu singalaththin payangaravaatham.
singalappadaihalal maddum intha vettriai eduththirukkamudiaathu. china, india, pakistan mattrum pala naduhalin uthavialthan. ithu singalavanai vida mattra naduhalthan kondadavenum.

manuthar June 20, 2010 at 9:37 AM  

eli pidikka vayalai koluththiyathu exactly singalavar veeram

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com