Tuesday, June 1, 2010

கிழக்கு மாகான முஸ்லிம்களின் கல்வி பின்னடைதுள்ளது

கல்முனை சமூக முனேற்ற ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த காலங்களுடன் ஒப்டுகையில் கிழக்கு மாகான முஸ்லிம்களின் கல்வி பின்னடைதுள்ளது என்று தெரிவித்துள்ளது இந்த ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்விக்கான வசதி வாய்புகள் குறைத்தன காலங்களில் கல்வியில் கிழக்கு மாகான முஸ்லிம் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் கடந்த ஐந்து வருடங்களாக பின்னடைதுள்ளது என்று தெரிவித்துள்ளது.

சுனாமியின் பின்னர் எமது சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் கல்வி வறுமையை போக்குவதற்கு புத்திஜீவிகள் , பொது அமைப்புகள் , சமூக நலன் விரும்பிகள் ஒன்றிணைத்து செயல்படவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் வளங்கள் கொண்ட பாடசாலைகள் குறைவாக இருந்தது, ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்பட்டது , மாலை நேர வகுப்புகள் பெரிதாக இருக்கவில்லை ஆனால் மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் சிறப்பாக இருந்தது என்று கூறும் இந்த அமைப்பு முஸ்லிம்களின் கல்வி பின்னடைவுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட சில அடிப்படையான காரணங்கள் என்று சிலவற்றை சுட்டி காட்டியுள்ளது.

மாணவர்களிடம் அதிகரித்துள்ள கையடக்கத் தொலைபேசி, வெளிநாட்டு மோகம் – UK,USA- அதிகரித்துள்ள பொழுதுபோக்கு வசதிகள், விரைவாக பணத்தை அடையும் மனநிலை, பெற்றோர்களின் கவனக் குறைவு, சமூக நல நிறுவனங்களின் மந்தமானபோக்கு, படங்கள் , நாடகங்கள் மீது உள்ள மோகம், புகைத்தல் பாவனை, பாடங்களை வீட்டில் மீட்ட தவறுதல், இணைய வலம் , பேஸ் புக் பாவனை , போன்றவற்றை பிரதான காரணமாக குறிபிட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com