விழுப்புரம் அருகே வெடிகுண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு: ப.சிதம்பரத்துக்கு குறியா?
விழுப்புரம் அருகே வெடிகுண்டு வைத்து மர்ம நபர்கள் தண்டவாளத்தை தளர்த்துள்ளனர். இதனால் ராக்போர்ட் இரயிலில் இருந்த 2 ஆயிரம் பயணிகள் உயிர் தப்பினர். பேரணி எந்த இடத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு வெடிச் சத்தம் கேட்டு இரயில்வே மாஸ்டர் நிகழ்விடத்திற்கு சென்று தண்டவாளத்தை பார்த்துள்ளார்.
அப்போது 3 அடி அகலத்திற்கு தண்டவாளம் வெடித்து உடைந்து கிடந்ததை பார்த்து உடனடியாக இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ராக்போர்ட் விரைவு இரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் இரயிலில் இருந்த 2 ஆயிரம் பயணிகள் உயிர் தப்பினர்.
தண்டவாளம் தகர்ப்பு எதிரொலியாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் இரயில்களும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த இரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இது பற்றி தகவல் அறிந்த இரயில்வே டி.ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது தண்டவாளம் அருகே கிடந்த துண்டு சீட்டை அவர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அதேநேரம் இத்தாக்குதல் சிதம்பரம் அவர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்டதாக என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி செல்ல திட்டமிட்டு இருந்தார்.
அவரது பாதுகாப்புக்காக இரவு 9.30 மணிக்கே கமாண்டோ படையினர் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து விட்டனர். ஆனால் டெல்லியில் இருந்து ப.சிதம்பரம் வந்த விமானம் காலதாமதமாக இரவு 10.50 மணிக்குதான் சென்னை வந்தது. இதனால் ப.சிதம்பரம் மலைக்கோட்டை ரெயிலில் செல்ல முடியவில்லை. இரவில் நுங்கம்பாக்கம் வீட்டில் தங்கினார்.
ப.சிதம்பரம் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த மலைக்கோட்டை ரெயிலும் இரவு 1.30 மணியளவில்தான் குண்டு வெடித்த இடத்தை கடந்து செல்லும் எனவே ப.சிதம்பரத்துக்கு குறிவைக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்தது.
இதனால் ப.சிதம்பரத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6.50 மணிக்கு அவர் விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து காரில் காரைக்குடி புறப்பட்டு சென்றார்
0 comments :
Post a Comment