Wednesday, June 2, 2010

த.தே.கூ வட மாகாண சபையை கைப்பற்றி வன்னி மக்களுக்கு உதவி செய்வார்களாம்.

ஏலவே எதிர்பார்த்தது போன்று அடுத்த வாக்கு வேட்டைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. வட மாகாணத்தில் விரைவில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளதாகவும், இந்தத் தேர்தலில் தமது கட்சி போட்டியிட உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அதன் மூலம் இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

வட மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் வன்னி மக்களின் அவலங்களுக்கு தீர்வு காண முடியும் னஎ அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாகவும் வன்னி மக்கள் எதிர்நோக்கி வரும் அவலநிலைமைகளை தாம் நேரில் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின்போது பாராளுமன்ற ஆசனங்களினூடாக மக்களின் அவலங்களை தீர்க்கபோகின்றோம் என முழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அப்போது மாகாண சபையினூடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற கருத்தை முன்வைத்திருக்கவில்லை என்ற விடயம் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகவும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com