Friday, June 4, 2010

ததே.கூ இந்தியாவின் விருப்பத்திற்கு செயற்படுகின்றமையாலேயே நாம் பிரிந்துள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை கருத்திலெடுக்காது இந்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படுகின்றமையாலேயே தாம் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்ல நேரிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 1ம் திகதி முதல் 30ம் திகதி வரை புதிய கட்சிகளை பதிவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருப்பதை அடுத்து தாம் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி எனும் கட்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிக்காந்தாவின் பெயரை தலைவராகவும் தனது பெயரை செயலாளர் நாயகமாகவும் போட்டு பதிவு செய்து கொள்ளவுள்ளதாக மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com