Wednesday, June 30, 2010

சந்திரிகாவின் முன்னாள் பாதுகாப்பு பணிப்பாளருக்கு 4 வருட கடுழிய சிறைத்தண்டனை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்கவின் காலகட்டத்தில், பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் குணரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்றம் 4 வருட கடுழிய சிறைத்தண்டனையையும் 50 ரூபா அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை பயமுறுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 50 ஆயிரம் ரூபா அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

No comments:

Post a Comment