ஜனாதிபதி இன்று உக்ரேய்னுக்கு புறப்படு முன்னர் பதில் நிதி அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பாராளுமன்று கூடியபோது பதில் நிதி அமைச்சரினால் 7 பாராளுமன்றுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்து பேசிய பதில் நிதி அமைச்சர் சரத் அமுனுகம தற்போது இலங்கையில் தனிநபர் வருமானம் ஆண்டிற்கு 2053 அமெரிக்க டொலர் எனவும் இது 2004ம் ஆண்டு 1062 அமெரிக்க டொலராக காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6% அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை 28.5% வளர்ச்சியை காண்பிப்பதாகவும் சரத் அமுனுகம தெரிவித்தார். இதேவேளை 2004ம் ஆண்டில் தொழில் அற்றோர் விகிதம் 8.3 ஆக காணப்பட்டதுடன் தற்போது அது 5மூ குறைந்துள்ளதாகவும் சரத் அமுனுகம தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பேசுகையில் மீள் குடியேற்றம் மற்றம் கன்ணி வெடி அகற்றுதல் என்பனவே அரசின் பிரதான பணிகாகவுள்ளதாகவும் அதன் பொருட்டு 640 கிராமங்களில் 15 லட்சம் மிதிவெடிகள் மீட்டகப்பட்டுள்ளதாவும் தெரிவித்த அவர் இதன் பிரகாரம் அரசாங்கம் 700 கோடி ரூபாய்களை செலவிட்டுள்தாகவும் தெரிவித்தார்.
இன்று சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது நாட்டு மக்களுக்கு ஏதுவானது அல்ல எனவும் இது மக்களை மேலும் வறுமைக்கு இட்டுச்செல்லும் எனவும் எதிர்கட்சியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தெரிவித்ததை அடுத்து பாராளுமன்றம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை 9.30 மணிக்கு மீண்டும் வரவு செலவு திட்டம் மீதான விவாதம் தொடரும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment