12 மாணவிகளை கெடுத்த ஆசிரியரைத் தேடி வலைவிரிப்பு.
மஸ்கெலிய பிரதேசத்திலுள்ள அரச பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். குறிப்பிட்ட ஆசிரியர் அப்பாடசாலையில் கல்வி பயின்ற 12 உயர் தர மாணவிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் பொலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட ஆசிரியர் கடந்த ஒரு மாத காலமாக இச்செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்தாகவும், மாணவிகள் பயம் காரணமாக விடயத்தினை வெளிவிடவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விடயம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர் பிரதேசத்தை விட்டு ஒடி ஒழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment