Monday, June 28, 2010

ஆப்கான்-தலிபான்களால் 11 பேர் தலை துண்டித்து கொலை

ஆப்கானிஸ்தானில் 11 பொது மக்களை தலிபான் தீவிரவாத கும்பல் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளது. காட்டுமிரான்டித்தனத்துக்கு அடையாளமாக விளங்கும் தலிபான்கள், தங்கள் எதிரிகளை கொடூரமாக கொல்வதை கொள்கையாக கொண்டுள்ளனர்.

காஸ் உருஸ்கான் மாகாணத்தில் 11 பேரை கடத்திச் சென்ற தலிபான்கள் அவர்களை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த தலிபான் கமாண்டரான ஜுமா கான் என்பவர் கடந்த மாதம் அமெரிக்கப் படைகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். அவரை காட்டிக் கொடுத்ததாக சந்தேகத்தின்பேரில் இந்த 11 பேரையும் தலிபான்கள் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்களை தலையை வெட்டிக் கொன்றுள்ளனர்.

No comments:

Post a Comment