Friday, May 21, 2010

ஐ.தே.கட்சியின் முக்கிய பதவிகளுக்காக தேர்தல். சிபார்சுக்குழு அறிக்கை.

ஐக்கிய தேசியக் கட்சியினுள் உருவாகியுள்ள தலைமைக்கு எதிரான கோஷங்களை அடுத்து நிலைமைகளை ஆராய்ந்து சிபார்சினை மேற்கொள்வதற்காக கட்சியின் முத்த உறுப்பினர்களில் ஒருவரான ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையில் அமைக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழு இன்று சிபார்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

சிபார்சில் கட்சியின் தலைமை உட்பட பெரும்பாலான முக்கிய பதவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் பெயர்கள் முன்மொழியப்படும்போது அப்பதவிகளுக்காக ரகசிய வாக்கெடுப்பு இடம்பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க தொடர்வற்கு கட்சியினுள் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், அப்பதவியை கைப்பற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் மகனும் , அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிறேமதாஸ கண்வைத்து ரணிலுக்கு எதிரான கருத்துக்களை வெளிட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com