Friday, May 28, 2010

அமெரிக்காவில் ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து ஜீ.எல் பீரிஸ் வெளியேற்றம்.

உத்தியோகபூர்ய விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அங்கு தேசிய பத்திரிகையாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று காலை இடம்பெற்ற மேற்படி ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் காரணம் எதனையும் தெரிவிக்காது அங்கிருந்து வெளியேறியதாக தேசிய பத்திரிகையாளர் அமைப்பின் தலைவர் ரெஜின்டர் சிங் குறிப்பிட்டார்.

இவ்விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் , மேற்படி ஊடவியலாளர்கள் மாநாட்டிலிருந்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியேறியமைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை எனவும்; தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com