Friday, May 28, 2010

நாடு எதிர்நோக்கும் அடுத்த அச்சுறுத்தல் போதைப்பொருள்.- பொலிஸ் மா அதிபர்.

இலங்கையை பீடித்திருந்த பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டுள்ள நிலையில் நாடு எதிர்நோக்கியிருக்கும் அடுத்த அச்சுறுத்தலாக போதைப்பொருள் உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இவ்வியடம் தொடர்பாக வீசேட ஊடகவியாலளர் மாநாடொன்றில் பேசிய அவர் , நாட்டில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுறுத்தலில் நாட்டில் இயங்கும் சகல மசாஜ் நிலையங்கள், மதுபாண விற்பனை நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள் என்பவற்றில் விசேட கவனம் செலுத்துமாறு வேண்டப்பட்டுள்ளது.

மேற்படி விடயங்களில் தவறுகளை செய்கின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து சட்டத்தின் பிரகாரம் அதிகூடிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்த பொலிஸ் மா அதிபர் இன்று போதைப் பொருள் வியாபரிகள் பாடசாலைகளுக்கு அருகில் தமது வியாபாரத்தினை வியாபித்துள்ளதாகவும் இதன்பால் ஈர்க்கப்படும் இளம் சமூகத்தினர் தமது வாழ்வினை இழக்கும் அபாயத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே மாநாட்டில் பேசிய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ் , போதைப்பொருள் வியாபாரிகள், சட்டவிரோத மதுபாண விற்பனை , விபச்சார விடுதி , கஞ்சா வியாபாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய சட்டவிரோத செயல்கள் தொடர்பாக தமக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் ரகசியமாக பேணப்படும் எனவும் தகவல் வழங்குனர்களுக்கு தகுந்த சன்மானமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கீழ் குறிப்பிடப்படும் இலக்கங்களுக்கு தகவல்களை வழங்கலாம் எனவும் கூறியுள்ளார். 2343333இ 2343334இ 2332985இ 2324626 ழச

பிரதி பொலிஸ் மா அதிபரின் கையடக்க தொலைபேசி 077-3679900

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com